சாலையை கடக்க முயன்றபோது மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலி

போடி அருகே சாலையை கடக்க முயன்றபோது மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.

Update: 2022-11-05 18:45 GMT

போடி அருகே உள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 66). நேற்று முன்தினம் போடி-தேவாரம் சாலையில் நடந்து சென்ற இவர், கிருஷ்ணா நகர் நுழைவு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் கீழே விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராமராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி ராதிகா கொடுத்த புகாரின்பேரில், போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்