சாலையை கடக்க முயன்றபோதுகார் மோதி தொழிலாளி பலி

தேவதானப்பட்டி அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-02-20 18:45 GMT


தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் தவமணி (வயது 42) கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், காமக்காபட்டியில் இருந்து ஊருக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் கெங்குவார்பட்டி புஷ்பராணி நகர் அருகே அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற கார் தவமணி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்தி்ற்கு விரைந்து சென்றனர். பின்னர் தவமணி உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார், காரை ஓட்டி வந்த கொடைக்கானலை சேர்ந்த செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்