காட்டு யானைகள் அட்டகாசம்

கூடலூர், பந்தலூரில் உடைமைகளை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன

Update: 2022-05-25 14:37 GMT

கூடலூர், மே.26-

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர், செல்வபுரம், ஆரோட்டுபாறை, சுபாஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. பொதுமக்களின் உடைமைகளை சேதப்படுத்தி வருகின்றது. வீடுகளின் சமையலறை, தண்ணீர் தொட்டிகள், கார் போன்றவற்றை யானை சேதப்படுத்தியது.


கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகரில் 3 காட்டு யானைகள் புகுந்தது. அங்கு சவுந்தரராஜன் வீட்டின் முன்பு இருந்த பாக்குமரத்தை சேதப்படுத்தியது. தகவல் அறிந்த சேரம்பாடி உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி, வனவர் மாண்பன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். சேரம்பாடி சரகத்தில் காட்டு யானைகள் தென்பட்டால் 9092320850 என்ற செல்போன் எண்ணிற்கு 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்