விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-09 18:45 GMT

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள இரணிபட்டி கிராமத்தை சேர்ந்த மலையாண்டி மகள் ஜெயலெட்சுமி(வயது 27). இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்பாக புதுக்கோட்டை மாவட்டம், கருத்தகோடங்கிபட்டியை சேர்ந்த வீரன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் தனது குழந்தைக்கு தடுப்பூசி போட செல்வதாக கூறி இரணிபட்டியில் உள்ள தனது அப்பா வீட்டிற்கு ெசன்றவர் அங்கு குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்தார். அவரை பெற்றோர் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயலெட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்