ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்த பெண் சாவு

நெல்லை ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்த பெண் இறந்தார்.

Update: 2023-01-10 19:33 GMT

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் 2-வது நடை மேடையில் நேற்று காலை ஒரு பெண் மயங்கி கிடந்தார். அவரை ரெயில்வே அதிகாரிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மதியம் இறந்தார்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்