பண்ருட்டி அருகேஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

பண்ருட்டி அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.

Update: 2023-04-19 18:45 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி காடாம்புலியூர் அருகே உள்ள கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் தில்லைகோவிந்தன். இவருடைய மனைவி மணியரசி (வயது 29). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே தில்லைகோவிந்தன் தனது மனைவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். காடாம்புலியூர்-பண்ருட்டி சாலையில் சென்றபோது, மணியரசிக்கு பிரசவ வலி அதிகமானதால் அலறினார். இதைகேட்ட ஓட்டுனர் செல்வகுமார் ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தினார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஜெரோம் ஆம்புலன்சிலேயே மணியரசிக்கு பிரசவம் பார்த்தார். அதில் மணியரசிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

Tags:    

மேலும் செய்திகள்