பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

பெண் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-09-13 00:34 IST

காரையூர் அருகே மேலத்தானியம் மேலத்தெருவை சேர்ந்தவர் அப்துல் மாலிக். இவரது சகோதரர் அப்பாஸ் அலி. இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அப்பாஸ் அலி மனைவி பைசல் நிஷா (வயது 32). அப்பாஸ் அலி மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பைசல் நிஷா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அப்துல் மாலிக் காரையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பைசல் நிஷாவை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு ேகாணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்