மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி பெண் பலி

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி பெண் பலியானார்.

Update: 2023-10-06 17:52 GMT

தூசி

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி பெண் பலியானார்.

வெம்பாக்கம் தாலுகா மாத்தூர் கிராமம் கம்மாள தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி பேபி (52). நேற்று முன்தினம் இவர்கள் மோட்டார்சைக்கிளில் மாமண்டூர் கிராமத்துக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

லட்சுமிபுரம் பகுதியில் வந்தவாசி- காஞ்சீபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்து விட்டு இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ைச வரவழைத்தனர்.

இருவரையும் மீட்டபோது பேபி இறந்தது தெரியவந்தது. சீனிவாசன் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரியையும் அதன் டிரைவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்