மின்சாரம் தாக்கி பெண் பலி

மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-15 18:49 GMT

திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே இடைச்செருவாயை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாப்பாத்தி (வயது 58). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் வயலில் மின்கம்பி அறுந்து விழுந்து தொங்கி கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இயற்கை உபாதை கழிப்பதற்காக பாப்பாத்தி அந்த வழியாக சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அங்கு அறுந்து விழுந்து தொங்கி கொண்டிருந்த மின்கம்பியை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்