வாகனம் மோதி பெண் பலி
குளித்தலையில் வாகனம் மோதி பெண் பலியானார். அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அந்த பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்த பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.