பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2022-09-14 23:00 IST

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே கொண்டசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மனைவி பச்சையம்மாள் (வயது 50). இவர் நேற்று கொண்டசமுத்திரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள வயல்வெளியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் பச்சையம்மாளிடம் வழிகேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்