தேவதானப்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தேவதானப்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-08-02 17:15 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று எழுவனம்பட்டி பிரிவு அருகே விஷம் குடித்து பெருமாள் தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் பெருமாள் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இந்த தற்கொலை குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்