பழனி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 28). கூலித்தொழிலாளி. கடந்த சில நாட்களாக இவர், கடன் பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----