தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-17 18:20 GMT

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பரமார்த்தலிங்கம் (வயது 49), தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பரமார்த்தலிங்கம் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். காலையில் எழுந்ததும் தான் விஷம் குடித்து விட்டதாக உறவினர்களிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரமார்த்தலிங்கம் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

---

Tags:    

மேலும் செய்திகள்