தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-09-28 19:33 IST

கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 34). தொழிலாளி. இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்