தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கடையம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-24 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே உள்ள மேட்டூரைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் காளி என்ற மாரிமுத்து (வயது 35). இவர் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், நல்லூரைச் சேர்ந்த ஆவுடையம்மாள் என்பவருக்கும் திருமணமாகி, 6 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய மாரிமுத்து தனது மனைவி ஆவுடையம்மாளை அருகிலுள்ள தனது தந்தை லட்சுமணன் வீட்டுக்கு சென்று சாப்பாடு வாங்கி வரும்படி கூறி அனுப்பி உள்ளார். அங்கு சாப்பாடு வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தபோது, அங்கு தனது கணவர் மாரிமுத்து தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், மாரிமுத்து குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்