பேரம்பாக்கம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பேரம்பாக்கம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-13 14:30 GMT

தொழிலாளி

பேரம்பாக்கம் பால்வாடி தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 54). கூலி தொழிலாளி. சங்கர் கடந்த சில மாதங்களாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய், இதயம் சம்பந்தமான பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும், அவருக்கு இதுநாள் வரையிலும் உடல் நலம் தேறவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் பலமுறை தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது குடும்பத்தினரிடம் கூறி புலம்பி வந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டார் அவருக்கு அறுதல் கூறி வந்தனர்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் சங்கரின் பேத்திக்கு பிறந்தநாள் வந்தது. அதில் கலந்து கொள்வதற்காக அவரது மனைவி வள்ளி பேரம்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். ஆனால் சங்கர் மட்டும் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் உடல்நலக்குறைவால் மன வேதனை அடைந்து சமையல் அறைக்கு சென்று அங்கு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் அவரது மனவைி வள்ளி வீட்டுக்கு வந்து பார்த்தபோது சங்கர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் மப்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்