மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-07-12 18:53 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மூதூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. அவரது மகன் சுரேஷ் (வயது 31), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக சுரேஷ் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்