தடுப்புச்சுவரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

சுல்தான்பேட்டை அருகே, குடிபோதையில் தடுப்புச்சுவரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2023-10-09 19:45 GMT

சுல்தான்பேட்டை அருகே புளியமரத்துபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் தங்கராஜ் நேற்று முன்தினம் காலையில் செலக்கரிச்சல் குட்டை அருகே உள்ள தடுப்புச்சுவரில் அமர்ந்து மது குடித்தார். அப்போது போதை தலைக்கேறியதும், அதில் இருந்து தங்கராஜ் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்