கார் மோதி தொழிலாளி பலி

ஆலங்குளம் அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-08-31 19:00 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள கீழப்பட்டமுடையார்புரம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பட்டுராஜா (வயது 34). கட்டிட தொழிலாளியான இவர் ஆலங்குளத்தில் வேலையை முடித்துவிட்டு, நேற்று இரவில் ஆலங்குளம்-– நெட்டூர் சாலையில் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அதே நேரம் குறிப்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்த நயினார் மகன் ரவி என்ற தெய்வம் (47) ஆலங்குளத்தில் இருந்து குறிப்பன்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 2 பேரும் குருவன்கோட்டை அருகே சென்ற போது, பின்னால் காவலாகுறிச்சியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பட்டுராஜா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரவிக்கு கால் முறிந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பட்டுராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரவியும் அதே ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்