மாணவர்களுக்கு யோகா பயிற்சி

கூடலூர் தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-06-18 19:00 GMT

கூடலூர்

கூடலூரில் உள்ள அரசினர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி மைய முதல்வர் ஷாஜி எம்.ஜார்ஜ் தலைமை தாங்கினார். மனவளக்கலை தலைவர் தங்கமணி வரவேற்று பேசினார். சர்வதேச யோகா தினம், யோக பயிற்சியால் கிடைக்கும் உடல் ஆரோக்கியம், தினசரி ஒவ்வொருவரும் யோகா பயிற்சிகள் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம், இளம் வயதிலேயே யோகா பயிற்சிகளை கடைப்பிடிப்பதன் மூலம் உடலுக்கும், மனதுக்கும், வாழ்வியலுக்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்து மணவளக்கலை பேராசிரியர்கள் சுமிதா, சந்திரகலா ஆகியோர் மாணவர்கள் மத்தியில் விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து மாணவர்களுக்கு யோகா பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்