பெற்றோரை கொலை செய்த பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற சிறுமிக்கு பாராட்டு

ஆப்கானிஸ்தானில் இரண்டு தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

Update: 2020-07-23 06:29 GMT
காபூல்

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நிலவி வரும் சூழலில், அரசுக்கு ஆதரவாக செயல்படும் பொதுமக்களையும் தலிபன் பயங்கரவாதிகள் கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோர் மாகாணம் தியோரா மாவட்டத்தை சேர்ந்த கமர் குல் என்ற  அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால், கடந்த 16 ஆம் தேதி நள்ளிரவு அவர்களது வீட்டுக்கு வந்த தலிபன் பயங்கரவாதிகள் சிறுமியின் கண்முன்பே அவரது பெற்றோரை படுகொலை செய்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்த ஏகே-47 துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவரது தம்பியும் அந்த துப்பாக்கியை வாங்கி சுட்டதில் மேலும் சில பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மீதமிருந்தவர்கள் தப்பியோடினர்.

சிறுமியின் தீர செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், சிறுமியும், அவரது தம்பியும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.. துப்பாக்கி ஏந்தியபடி அமர்ந்திருக்கும் அப்பெண்ணின் புகைப்படம் வைரலாக, தற்போது அவரும், அவரது தம்பியும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்