வீடியோ: நடிகர் ஓம் பூரியை கொலை செய்தது நரேந்திர மோடி , அடுத்த குறி சல்மானுக்கு பாகிஸ்தான் டிவி குற்றசாட்டு

பிரபல பாலிவுட் நடிகர் ஓம் பூரியை, பிரதமர் நரேந்திர மோடி தான் கொலை செய்துள்ளார் என பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2017-01-09 09:55 GMT

நடிகர் ஓம் பூரி கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் பாகிஸ்தான் நடிகர் நடிகைகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால், அவர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்ற காரணத்தால், பிரதமர் நரேந்திர மோடியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சேர்ந்து கொலைவிட்டதாக பாகிஸ்தானை சேர்ந்த தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது.

மேலும், அவரது தலையில் காயம் இருந்ததாகவும், அவரின் பிரேத பரிசோதனை அறிக்கை தங்களிடம் இருப்பதாகவும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓம் பூரியை அடுத்து சல்மான்கான் மற்றும் பாகிஸ்தான் நடிகர் பவாத் கானை குறி வைத்துள்ளதாக போல் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

போல் தொலைக்காட்சியின் இந்த செய்தி இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்