5 நாள் பயணமாக அருண்ஜெட்லி இன்று இங்கிலாந்து செல்கிறார்

5 நாள் பயணமாக அருண்ஜெட்லி இன்று இங்கிலாந்து செல்கிறார்

Update: 2017-02-23 20:45 GMT
புதுடெல்லி, 

 இந்தியாவுக்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி 5 நாள் அரசு முறைபயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறார். லண்டன்–இந்திய பொருளாதார பள்ளியில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் கருத்தரங்கில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

மறுநாள் இந்திய வர்த்தக கூட்டமைப்பு நடத்தும் கூட்டத்திலும், பங்கு சந்தை தொடர்பான வட்டமேஜை மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் இங்கிலாந்தை சேர்ந்த 100 தொழில் அதிபர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.

மேலும் செய்திகள்