அமெரிக்காவில் சீக்கிய வழிபாட்டு தலத்தில் குடிபோதையில் இளம்பெண்ணை கற்பழிக்க முயன்றவர் கைது

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள கிரெஷாம் நகரில் சீக்கியர்களின் வழிபாட்டுதலமான ‘குருத்வாரா’ உள்ளது.

Update: 2017-03-29 21:20 GMT

நியூயார்க்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு டிமோத்தி வால்டர் ஷிமித் (வயது 37) என்ற அமெரிக்கர் குடிபோதையில் குருத்வாரா அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர் இயற்கை உபாதையை கழிக்க குருத்வாராவில் உள்ள கழிவறையை பயன்படுத்திக்கொள்ள அங்கிருந்தவர்களிடம் அனுமதிகேட்டார். அவர்களும் அவரை அனுமதித்தனர்.

பின்னர், அவர் கழிவறைக்குள் சென்றுவிட்டு வெளியே வந்தபோது, அந்த வளாகத்துக்குள் இளம்பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். 26 வயதான அவர் குருத்வாரா உறுப்பினர் ஆவார்.

குடிபோதையில் இருந்த டிமோத்தி அந்த இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சித்தார். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே டிமோத்தி அவரை கடுமையாக தாக்கினார். இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்த மற்றொரு உறுப்பினர் விரைந்து வந்தார்.

அவர் டிமோத்தியிடம் இருந்து அந்தப்பெண்ணை விடுவித்துவிட்டு, அவரை மடக்கிப்பிடித்து வைத்து, போலீசாருக்கு தகவல்கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்