ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவு: 2 அமெரிக்கர்கள் கைது

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம், சியோன் நகரை சேர்ந்தவர்கள் ஜோசப் ஜோன்ஸ் (வயது 35), எட்வர்ட் சிமென்டி (35).

Update: 2017-04-13 21:45 GMT

வாஷிங்டன்,

இவர்கள் இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு சமூக வலைத்தளம் மூலம் ஆதரவு தேடித்தரும் முயற்சியில் ஈடுபட்டதுடன், அந்த இயக்கத்துக்கு பொருளுதவிகள் வழங்கவும் முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் சிகாகோ நகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இருவரில் எட்வர்ட் சிமென்டி, ‘‘அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை உச்சியில் ஐ.எஸ். இயக்கத்தின் கொடி பறக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளார்.

இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விட்டது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்