அல்கொய்தா இயக்க தலைவராக பின்லேடனின் மகன் ஹன்சா பொறுப்பேற்கிறார்
அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக மறைந்த பின்லேடனின் மகன் ஹன்சா பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக இருந்த பின்லேடன் கடந்த 2011ஆம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார்.இதனையடுத்து அடுத்த தலைவராக பின் லேடனின் மகன் ஹன்சா பொறுப்பேற்க தயாராகி வருவதாக முன்னாள் புலன் விசாரணை துறை அதிகாரி அலி சவ்கான் உறுதி செய்துள்ளார்.
ஹன்சா ஏற்கனவே தனது தந்தையை கொன்றவர்களை பழிவாங்குவேன் என சபதமிட்டது குறிப்பிடத்தக்கது.