நேபாளத்தின் முன்னாள் பிரதமர் பிரசண்டாவின் ஒரே மகன் உயிரிழப்பு

நேபாள நாட்டு முன்னாள் பிரதமர் பிரசண்டாவின் ஒரே மகனான பிரகாஷ் டஹால் இருதய செயலிழப்பினால் இன்று உயிரிழந்துள்ளார்.

Update: 2017-11-19 05:22 GMT

காத்மண்டு,

நேபாள நாட்டின் சி.பி.என். (மத்திய மாவோயிஸ்டு) தலைவராக இருந்தவர் பிரசண்டா. இவரது மகன் பிரகாஷ் டஹால். 30 வயதினை கடந்த இவர் இன்று காலை தபதலியில் உள்ள நார்விக் சர்வதேச மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு இருதயம் செயலிழந்து விட்டது என அவர்கள் கூறியுள்ளனர்.

பிரசண்டாவின் செயலாளராக இருந்து வந்த பிரகாஷ் அவரது கட்சியின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஜப்பாவில் வசித்து வந்த பிரகாஷ் அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக காத்மண்டு வந்துள்ளார்.

இந்த தேர்தலில் பிரகாஷின் மனைவி பீனா டஹால் கஞ்சன்பூர் மாவட்டத்தில் இருந்து போட்டியிடுகிறார். பிரசண்டாவிற்கு பிரகாஷ் தவிர்த்து 3 மகள்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்