இலங்கை மந்திரிசபை மாற்றி அமைப்பு

இலங்கை அதிபர் சிறிசேனா, தனது மந்திரிசபையை நேற்று 4–வது தடவையாக மாற்றி அமைத்தார்.

Update: 2018-05-01 22:00 GMT

கொழும்பு,

கடந்த மாதம் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்றுப் போனதால், சிறிசேனா கட்சியை சேர்ந்த 6 மந்திரிகள் உள்பட 16 எம்.பி.க்கள், எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்தனர்.

அதனால், நேற்று மந்திரிசபை மாற்றி அமைக்கப்பட்டது. இதில், முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, மகிந்த அமரவீரா உள்பட 18 மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அவர்கள் புதிய இலாகாக்களின் மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

மேலும் செய்திகள்