உலகைச்சுற்றி...

* பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்து மதத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரும், அவரது மகனும் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2018-05-14 00:00 GMT
* ஆப்கானிஸ்தானில், ஜலாலாபாத் நகரில் உள்ள அரசு கட்டிடம் ஒன்றை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று குண்டுவெடிப்புகளை நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் உடல் சிதறி பலியாகினர்.

* வடகொரியா தனது புங்கியே-ரி அணு ஆயுத சோதனை தளத்தை அடுத்த சில தினங்களில் அழிக்கப்போகிறது. இதற்காக அந்த நாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாராட்டி உள்ளார். நன்றியும் தெரிவித்து உள்ளார்.

* பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்து மதத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரும், அவரது மகனும் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

* மலேசியாவில் பிரதமர் மகாதீர் முகமது அரசில் மந்திரி பதவிகளை பகிர்ந்து கொள்வதில் கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டு உள்ளதாகவும், அதை சரி செய்யும் முயற்சியில் பிரதமர் மகாதீர் முகமதுவும், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிமும் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்