உலகைச்சுற்றி...

* துருக்கி நாட்டின் இஸ்தான்புல், இஜ்மிர் நகரங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிற 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-14 22:00 GMT
* தென் கொரியாவுடனான போர் பயிற்சி நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி உள்ள நிலையில், தென் கொரியாவும், வடகொரியாவும் 10 ஆண்டுகளில் முதல் முறையாக ராணுவம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.

* காசாவில் நடந்த வன்முறை சம்பவங்களில் 129 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதையொட்டி, இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. பொதுச்சபையில் கண்டன தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 8 நாடுகளும் ஓட்டுபோட்டன. 45 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.

* ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஹூதைதா நகரத்தை கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்து மீட்பதற்காக சவுதி கூட்டுப்படைகள் நேற்று இரண்டாவது நாளாக கடுமையான தாக்குதலில் ஈடுபட்டன. 

மேலும் செய்திகள்