சோமாலியாவில் ராணுவ தளம் மீது தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதல்; 27 வீரர்கள் பலி

சோமாலியா நாட்டில் ராணுவ தளத்தின் மீது நடந்த தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதலில் 27 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

Update: 2018-07-23 08:18 GMT

மொகதிசு,

சோமாலியா நாட்டில் கிஸ்மயூ துறைமுக நகருக்கு சற்று தொலைவில் அந்நாட்டின் ராணுவ தளம் அமைந்துள்ளது.  இந்த நிலையில், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை தளத்தின் மீது தீவிரவாதிகள் வெடிக்க செய்துள்ளனர்.

அதன்பின் உள்ளே நுழைந்துள்ளனர்.  இந்த தாக்குதலில் 27 வீரர்கள் கொல்லப்பட்டனர்.  சில வீரர்கள் வன பகுதிக்குள் தப்பி சென்றனர்.  இதனை அடுத்து அவர்கள் தளத்தினை தங்களது கட்டுக்குள் எடுத்து கொண்டுள்ளனர்.  இந்த தாக்குதலை அல் ஷபாப் அமைப்பு நடத்தியுள்ளது.

கடந்த ஜூனில் ராணுவ தளம் மீது இந்த அமைப்பு நடத்திய தாக்குதலில் 7 வீரர்கள் காயமடைந்தனர்.

மேலும் செய்திகள்