இங்கிலாந்தில் 3 வயது சிறுவன் மீது ஆசிட் வீச்சு தாக்குதல்; 5 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு

இங்கிலாந்தில் 3 வயது சிறுவன் மீது நடந்த ஆசிட் வீச்சு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-07-25 05:17 GMT

ஒர்செஸ்டர்,

இங்கிலாந்து நாட்டில் ஒர்செஸ்டர் பகுதியில் ஹோம் பர்கெய்ன்ஸ் ஸ்டோரில் 3 வயது சிறுவன் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.  இதனை தொடர்ந்து முகம் மற்றும் கை ஆகியவற்றில் பலத்த காயங்களுடன் சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளான்.

இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.  இந்நிலையில், இதனுடன் தொடர்புடைய 5வது நபரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

அவர்கள் 5 பேர் மீதும் உடலுக்கு தீவிர தீங்கு விளைவிக்க திட்டமிடல் என குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  போலீசார் அந்த 5 பேரையும் கிடர்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர் செய்கின்றனர்.

மேலும் செய்திகள்