ஆவிகளுடன் உறவு; குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் வினோத பெண்

ஒரு பெண் தான் ஆவிகளுடன் உறவு வைத்து கொண்டதாக தெரிவித்துள்ளதோடு அவர் அறிவித்துள்ள அடுத்த திட்டம் கேட்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Update: 2018-08-06 12:25 GMT
லண்டன்

இங்கிலாந்தின் பிரிஸ்டலைச் சேர்ந்த அமேதிஸ்ட் ரெல்ம் (30) ஆவிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனை கூறுபவர். அவர் இதுவரை 20 ஆவிகளுடன் உறவு வைத்துக் கொண்டதாகவும் அவை மனிதர்களை விட அதிகம் தன்னை மகிழ்ச்சியாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அடுத்து அவர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சந்தித்த ஒரு ஆவியுடன் மிகவும் சீரியஸான உறவு முறையிலிருப்பதாகவும் அந்த ஆவியுடன் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்திலிருப்பதாகவும் கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

தன்னால் அந்த ஆவிகளை நன்கு உணர முடிவதோடு, வெவ்வேறு ஆவிகளை வித்தியாசப்படுத்தி உணரவும் முடியும் என்கிறார். முதல் முறை அவர் ஒரு புதர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோதுதான் தன் முதல் ஆவிக் காதலனை சந்தித்ததாகவும் தன்னால் அதைப் பார்க்க இயலாவிட்டாலும், அதனுடன் பேசவும், உறவு கொள்ளவும் முடிந்தது என்கிறார் அவர். இன்னொரு ஆவி, அவர் வெவ்வேறு ஆவிகளுடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்து அவருடன் கோபித்துக் கொண்டதாகவும் கூட தெரிவிக்கிறார்.

இதனால் இனி அந்த உறவு முறையை சீரியஸாக எடுத்துக் கொண்டு அதனுடன் தொடர்ந்து வாழ்ந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். ஒரு ஆவியுடன் குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியமா என்று அவரிடம் கேட்டபோது, ஏற்கனவே ஒரு பெண் கர்ப்பமுற்றதாகவும், அவரால் உடல் - மன சமநிலையை சரியாக கவனித்துக் கொள்ள இயலாததால் அந்தக் கரு இறந்து விட்டதாகவும், எனவே ஒரு ஆவியுடன் குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியம்தான் என்றும் ரெல்ம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்