அல்பேனியாவில் 2 குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை சுட்டு கொன்ற இளைஞர்

அல்பேனியா நாட்டில் 2 குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை இளைஞர் ஒருவர் சுட்டு கொன்றுள்ளார்.

Update: 2018-08-11 02:43 GMT
திரானா,

அல்பேனியா நாட்டின் திரானா நகரின் தெற்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் ரெசுலாஜ் என்ற கிராமம் உள்ளது.  இங்கு வசித்து வந்தவர் ரித்வான் ஜைகாஜ் (வயது 24).

இந்த நிலையில், ஜைகாஜ் தனது பெரிய மாமா மற்றும் அவரது மகன்கள் உள்பட உறவினர்கள் பலரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.  இந்த சம்பவத்தில் 9 வயது குழந்தை, டீன் ஏஜ் சிறுமி மற்றும் 3 பெண்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.

இதனை அடுத்து அங்கிருந்து அவர் தப்பியோடி விட்டார்.  ஜைகாஜின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ள காவல் துறையினர் இதுபற்றிய தகவல் எதுவும் தெரிய வருமெனில் தெரிவிக்கும்படி கூறியுள்ளனர்.  தொடர்ந்து அவர்கள், ஜைகாஜிடம் ஆயுதம் இருக்க கூடும் என்றும் அதனால் அவரை நெருங்கி விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

அவரது பெற்றோரிடமும் விசாரணை நடந்து வருகிறது.  இந்த சம்பவத்திற்கான பின்னணி பற்றி தெளிவாக தெரியவரவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்