ஆப்கானிஸ்தானில் வாக்குச்சாவடிகளில் குண்டுகள் வெடிப்பு

ஆப்கானிஸ்தானில் வாக்குச்சாவடிகளில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-10-20 09:13 GMT

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.

காபூல் நகரில் வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்ய வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்ற போது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர் என அதிகாரிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 “வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்ட பள்ளியில் வெடிகுண்டு வெடித்ததும் என்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடிவந்துவிட்டேன்,” என ஒருவர் கூறியுள்ளார் என ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு பலர் உயிரிழந்து உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே வாக்குச்சாவடிகளில் மேலும் இரண்டு குண்டு வெடிப்புக்கள் நடந்ததை உள்துறை அமைச்ச செய்தித் தொடர்பாளார் நஸ்ரத் ராஹிமி உறுதிசெய்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

மேலும் செய்திகள்