இந்திய இளம் ஜோடியின் உயிரை பறித்த சாகச பயணம்!

சாகச பயணம் மேற்கொள்ளும் ஆசையில் அமெரிக்கா சென்ற இளம் தம்பதியர் சுமார் 800 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளனர்!

Update: 2018-10-30 12:23 GMT

கேரளாவை சேர்ந்த விஷ்ணு விஸ்வநாத், தனது மனைவி மீனாக்ஷியுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு சமீபத்தில் குடிபெயர்ந்துள்ளார். சான் ஜோஸ் பகுதியை மையமாக கொண்டு இயங்கும் சிஸ்கோ நிறுவனத்தில் சிஸ்டம் என்ஜினீயராக பணி கிடைத்து உள்ளது.  அமெரிக்கா சென்ற விஷ்ணு சாகச பயணங்களில் ஆர்வம் கொண்டவர்., இதன் காரணமாக அடிக்கடி சுற்றுலா சென்று, அங்குள்ள மலைகளின் உச்சியில் நின்று பல்வேறு புகைப்படங்களை எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களை தொடர்ந்து தங்களது பேஸ்புக் பக்கங்களிலும், ப்ளாகிலும் பதிவு செய்து வந்துள்ளனர். 

அந்த வகையில் சமீபத்தில், பிரபல யோசிமிட்டி தேசிய பூங்காவிற்கு இருவரும் சென்றதாக தெரிகிறது. அப்போது, அங்குள்ள 800 அடி பள்ளத்தாக்கில் இருவரும் எதிர்பாராத விதமாக விழுந்து பலியானதாக தெரிகிறது. இவர்களது உடல்களை கடந்த வியாழனன்று பூங்கா அதிகாரிகள் டாப்ட் பாயிண்ட் என்ற இடத்திற்கு கீழே கண்டுபிடித்துள்ளனர்.

இவர்களின் மறைவு செய்தியை அறிந்த செங்கனூர் பொறியியல் கல்லூரி நிர்வாகம், இருவரும் தங்கள் கல்லூரி மாணவர்கள் எனவும், இவர்களது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது!

மேலும் செய்திகள்