எகிப்து: ஐ.எஸ். பயங்கரவாதிகள் 19 பேர் சுட்டுக்கொலை

எகிப்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 19 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2018-11-04 17:16 GMT
கெய்ரோ,

எகிப்து நாட்டின் மின்யா மாகாணத்தில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் மீது 2–ந் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. எகிப்தில் கிறிஸ்தவர்கள் மீதான தொடர் தாக்குதல் சம்பவத்துக்கு போப் ஆண்டவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இதில் தொடர்புடைய பயங்கரவாதிகளை தேடும் பணியில் எகிப்து போலீசார் ஈடுபட்டனர். மின்யா மாகாணத்தின் பாலைவன பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 19 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்