இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைந்தார் ராஜபக்சே சிறிசேனாவுக்கு பின்னடைவு?

இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் ராஜபக்சே இணைந்தார்.

Update: 2018-11-11 09:38 GMT
கொழும்பு,

இலங்கையில் திடீரென விக்கிரமசிங்கே, பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார். இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது.  

இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை கடந்த வெள்ளிக்கிழமை  திடீரென கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5ம்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே, இலங்கையின்  பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளார்.

 மகிந்த ராஜபக்சேவுடன் முன்னாள் எம்.பி. 50 பேரும் இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தனர்.

ராஜபக்சே.இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தது மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த தேர்தலைப்போல் இந்த முறையும் ஐக்கிய மக்கள் முன்னணி வெற்றிலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என சிறிசேன தரப்பும், பொதுஜன பெரமுன-வின் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ராஜபக்சே தரப்பும் கூறிவந்த நிலையில், கருத்து மோதல் காரணமாக இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து ராஜபக்சேவெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்சே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் என்பதுடன் அந்த கட்சியின் ஆலோசர்களில் ஒருவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்