ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்களில் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகங்கள் அமந்துள்ள இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Update: 2018-12-24 12:29 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசு அலுவலகங்கள் இருக்கும் வளாகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளனர். அந்நாட்டு அமைச்சகங்கள் அமைந்துள்ள வளாகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  அப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று பதிலடியை  தொடங்கியுள்ளனர். இதற்கிடையே அங்கு பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலையும் நடத்தியுள்ளனர். 

மேலும் செய்திகள்