சீனாவில் கத்தி முனையில் கடத்தப்பட்ட பேருந்து மோதி 5 பேர் பலி
சீனாவில் கடத்தப்பட்ட பேருந்து மோதியதில் சாலையோரம் நின்றிருந்த 5 பேர் பலியாகி உள்ளனர்.
பெய்ஜிங்,
சீனாவின் தென்கிழக்கே உள்ள பியூஜியான் மாகாணத்தில் பேருந்து ஒன்றை இன்று மதிய அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் கத்தி முனையில் கடத்தியுள்ளார்.
இந்த பேருந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒரு போலீஸ்காரரும் அடங்குவார். 21 பேர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.