சீனாவில் கத்தி முனையில் கடத்தப்பட்ட பேருந்து மோதி 5 பேர் பலி

சீனாவில் கடத்தப்பட்ட பேருந்து மோதியதில் சாலையோரம் நின்றிருந்த 5 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2018-12-25 11:43 GMT
பெய்ஜிங்,

சீனாவின் தென்கிழக்கே உள்ள பியூஜியான் மாகாணத்தில் பேருந்து ஒன்றை இன்று மதிய அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் கத்தி முனையில் கடத்தியுள்ளார்.

இந்த பேருந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது.  இதில் 5 பேர் பலியாகி உள்ளனர்.  அவர்களில் ஒரு போலீஸ்காரரும் அடங்குவார்.  21 பேர் காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்