காங்கோ நாட்டில் லாரி மீது பேருந்து மோதல்; 50 பேர் பலி
காங்கோ நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 50 பேர் பலியாகி உள்ளனர்.
காங்கோ நாட்டின் மேற்கே கிசாந்து நகரில் பியூலா என்ற பகுதியருகே பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 50 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயமடைந்து உள்ளனர். பேருந்தின் ஓட்டுநர் மிக வேகமுடன் ஓட்டி சென்றது விபத்தினை ஏற்படுத்தி உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்து உள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயர கூடும் என கூறப்படுகிறது.