ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 5.3 ஆக பதிவு

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 5.3 ஆக பதிவானது.

Update: 2019-01-18 17:11 GMT
டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள ஹோன்சு தீவில் சிபா பகுதியில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவு கோலில் 5.3 புள்ளிகள் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  

இந்த நிலநடுக்கத்தில் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.


மேலும் செய்திகள்