ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலியாயினர்.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் அதே வேளையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறார்கள்.
போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்க ஆப்கான் ராணுவம் தீவிரமாக போராடி வருகிறது.
அதன்படி ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, தரை வழியாகவும் வான் வழியாகவும் ராணுவவீரர்கள் அதிரடி தாக்குதல்களை நடத்துகின்றனர். அந்த வகையில், குனார் மாகாணத்தின் சபா தாரா மாவட்டத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மீது ஆப்கான் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
இந்த அதிரடி வான்தாக்குதலில் ஐ.எஸ். பயங் கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் பதுங்கு குழிகள், ஆயுதகிடங்குகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் அதே வேளையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறார்கள்.
போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்க ஆப்கான் ராணுவம் தீவிரமாக போராடி வருகிறது.
அதன்படி ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, தரை வழியாகவும் வான் வழியாகவும் ராணுவவீரர்கள் அதிரடி தாக்குதல்களை நடத்துகின்றனர். அந்த வகையில், குனார் மாகாணத்தின் சபா தாரா மாவட்டத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மீது ஆப்கான் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
இந்த அதிரடி வான்தாக்குதலில் ஐ.எஸ். பயங் கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் பதுங்கு குழிகள், ஆயுதகிடங்குகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.