இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டலில் குண்டுவெடிப்பு; 50க்கும் மேற்பட்டோர் காயம்

இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

Update: 2019-04-21 04:43 GMT
கொழும்பு,

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், கொழும்பு நகரில் பல்வேறு இடங்களில் இன்று திடீரென குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம் மற்றும் நீர்கொழும்புவில் உள்ள ஆலயம் ஒன்றிலும், நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.  இதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.  50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்