ஆப்கானிஸ்தானில் ராணுவ வேட்டை; 2 தலீபான் தலைவர்கள் உள்பட 52 தீவிரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் 2 தலீபான் தலைவர்கள் உள்பட 52 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது. தீவிரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கஜினி பகுதியில் தலீபான் நிலைகளின் மீது அந்நாட்டு ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். வான்வழியேயான தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் 2 தலீபான் தலைவர்கள் உள்பட 52 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை அந்நாட்டு ராணுவ அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.