பிரேசிலில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

பிரேசிலில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர்.

Update: 2019-05-20 04:27 GMT
பிரசிலா,

பிரேசில் நாட்டில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பாரா. இந்த மாகாணத்தில் உள்ள பெலம் நகரத்தில் உள்ள பார் ஒன்றில் நேற்று மாலை துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் புகுந்தனர்.

 மதுபான விடுதியில் இருந்தவர்கள் மீது, அந்த நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் 6 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

துப்பாக்கி சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. தாக்குதல் நடைபெற்ற மது பாரில் போதைப் பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. எனவே, போதைப்பொருள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்