மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு; 10 பேர் காயம்

அமெரிக்காவில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-05-25 23:30 GMT

நியூயார்க், 

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தின் தலைநகர் டெரன்டோனில் மதுபான விடுதி ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஏராளமானவர்கள் மது, ஆடல் பாடல் என களிப்பில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதனால் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.

எனினும் இந்த துப்பாக்கி சூட்டில் 5 பெண்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து போலீசார், படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தாக்குதல் நடத்திய நபர் யார்? அதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்