ஆப்கானிஸ்தான் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Update: 2019-06-02 14:44 GMT


காபூலில் மேற்கு பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மூன்று கண்ணி வெடிகுண்டுகள் வெடித்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையை மேற்கொண்டாலும் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்