சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.6 ஆக பதிவு
சீனாவின் தென்மேற்கில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெய்ஜிங்,
சீனாவின் தென்மேற்கே சிச்சுவானின் யிபின் நகரில் கோங் கவுண்டி பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது.
இதுபற்றி சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், நிலநடுக்கம் 8 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவித்து உள்ளனர். இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் பிற சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.